நாமக்கல், டிச.11: கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்கு, பேட்டரி காரை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களது குறைகளை தெரிவிக்க ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். மெயின்ரோட்டில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து, கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் வரை மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல வேண்டும். கால் ஊனமடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றொருவர் துணையுடன் தான் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல வேண்டியுள்ளது. உடன் வருவதற்கு யாரும் இல்லாத மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்து செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.