சிவகங்கை, டிச.11: சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டியில் இருந்து உறங்கான்பட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாய் உள்ளது. இதனை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டியில் இருந்து உறங்கான்பட்டி செல்லும் தார்ச்சாலை சுமார் 3 கி.மீ தூரம் கொண்டது. இதில் 2 கி.மீ மதுரை மாவட்ட எல்கைக்குள் உள்ளது. எஞ்சியுள்ள ஒரு கி.மீ சாலை சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டது. இச்சாலையை கண்மாய்பட்டி, திருமலை, கள்ளராதினிப்பட்டி, அழகமாநகரி, உறங்கான்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் மேலூரில் இருந்து கள்ளராதினிப்பட்டி வழி கீழப்பூங்குடி வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பஸ் போக்குவரத்து உள்ளது. உறங்கான்பட்டி, அழகமாநகரி, மேலூர் ஆகிய ஊர்களுக்கு இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சாலை வழியே தான் செல்ல வேண்டும்.