மாற்றுதிறனாளிகள் தினவிழா

சேதுபாவாசத்திரம், டிச. 7: சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ரெண்டாம்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் டேவிட் சார்லஸ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சகுந்தலா முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவை ரெண்டாம்புளிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உடையார் துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் வரவேற்றார். இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சி, போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவா, மகேஷ்வரன், ஜனனி, நஷ்ரீன்பேகம், ஆசிரியர் ராஜாராம், தலைமை ஆசிரியர் பாலமுருகன் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் க.ஷாஜிதாபானு நன்றி கூறினார்.

Related Stories: