தஞ்சை, டிச. 7: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தஞ்சை ரயிலடி முன் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பைசல் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது வரவேற்றார். மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். தொழிற்சங்க மாநில செயலாளர் அப்துல்காதர், மாவட்ட பொது செயலாளர் பஜ்ருதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் ரியாஸ் அகமது, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, மே 17 இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, தேசியவாத காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முருகேசன், மதிமுக தமிழ்ச்செல்வன், அமுமுக மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் நல்லதுரை, மா.கம்யூ நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினர்.