குண்டும், குழியுமான புத்தனாம்பட்டி- கரட்டாம்பட்டி சாலை சீரமைப்பு

துறையூர், டிச.6: துறையூர் அருகே குண்டும், குழியுமாக இருந்த புத்தனாம்பட்டி- கரட்டாம்பட்டி சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டுள்ளது.

துறையூரை அடுத்த கரட்டாம்பட்டியில் இருந்து புத்தனாம்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்தசாலை வழியாக புத்தனாம்பட்டி, எதுமலை, பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ள திருப்பட்டூர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புத்தனாம்பட்டி கல்லூரி மாணவர்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், பயணிகள் பேருந்துகளும் இந்த சாலையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் முசிறி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட கலெக்டருக்கும், முசிறி ஒன்றிய நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: