கரூர்,டிச. 6: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருச்சி சாலையில் மாயனூர் பகுதியை தாண்டியதும் கிருஷ்ணராயபுரம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் வந்து செல்லும் பொதுமக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகம் முன்பாக மினி குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வேலை நிமித்தமாக அலுவலகம் அனைவரும் இந்த டேங்கில் வரும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.