தரங்கம்பாடி,டிச.4: மழை, வெள்ள காலங்களில் பாதிக்காமல் விவசாயிகளுக்கு பலன் தரும் திருச்சி 3 ரக நெல் விதைகளை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைத்திட வேளாண்துறை நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பா, தாளடி பயிர்களுக்கு திருச்சி 3 ரக நெல் மிகவும் ஏற்றதாக உள்ளது. மழை, வெள்ளதால் மூழ்கினாலும் பயிர் அழுகாமல், பாதிக்கப்படாமல் உள்ளது. எனவே திருச்சி 3 ரக நெல்லை சம்பா-தாளடி பயிர்களில் பயிரிட விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைத்திட வேண்டும். அதற்கு வேளாண்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருவிளையாட்டம் விவசாயி துரைராஜ் கூறியதாவது: மழை, வெள்ளம் காலங்களில் சம்பா தாளடிக்கு ஏற்ற பயிராக திருச்சி 3 ரக நெல் உள்ளது. நான் 8 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளளேன். கடந்த மழை புயலில் எந்த சேதமும் அடையவில்லை.