விராலிமலை, டிச.4: விராலிமலை அருகே உள்ள மலம்பட்டி தூய சவேரியார்ஆலய திருவிழா தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விராலிமலை அருகே பேராம்பூர் ஊராட்சி மலம்பட்டியில் புகழ் பெற்ற தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் ஆண்டு திருவிழா கடந்த கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி மறை மாவட்ட அருள் தந்தை யூஜின், கருமண்டபம் ஜுலியன் கொடியேற்ற திருப்பலி பூஜையை நடத்தினா். தொடரந்து நவநாள் திருப்பலி பூஜைகளை அருட் தந்தையர்கள் நடத்தினர். நேற்று (3ம் தேதி) பகல் தேர் பவனியன்று தேவராஜ்,மெல்கிமேயர், ஜெயராஜ், ஜோசப், அருளானந்தம் ஆகியோர் திருவிழா திருப்பலி பூஜையை நடத்தினர்.