ஆம்பூர், நவ. 23: ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தொடர் மழை காரணமாக புளிய மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது. ஆம்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே சின்ன பள்ளிக்குப்பம் கிராமத்தில் வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையில் இருந்த ஒரு புளிய மரத்தின் கிளை நேற்று மதியம் திடீரென முறிந்து, அருகிலிருந்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் அருகருகே இருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.