கொடுங்கையூர்: சென்னை மூலக்கடை சத்தியவாணி முத்து சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 18ம் தேதி அந்த பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்தது. இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள், அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டு, அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் சமரசம் பேசிய கொடுங்கையூர் போலீசார், கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை மேற்கண்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.