மன்னார்குடி, நவ. 21: முதல்வரின் நிவாரண அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என பி.ஆர். பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன் னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா முடங்கி கிடக்கிறது. கிராமப் புறங்களில் உள்ள மரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் செயல்படவில்லை. ஒரு கிராம நிர்வாக அலுவலர் மூன்று முதல் 5 கிராமங்களுக்கு பொறுப்பு வகிப்பதால் கிராம பகுதிகளுக்கு நிவாரண பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமுதம் அங்காடியில் அரிசி மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 என அறிவித்திருக்கிறார்.