தரங்கம்பாடி,நவ.21: நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் 2018 ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு பிரிமியம் தொகை செலுத்த சிட்டா அடங்கல் வழங்காததால் விவசாயிகள் பிரிமியம் தொகை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை பெற்ற சிட்டா அடங்கல் தேவைப்படுகிறது. தரங்கம்பாடி வட்டத்தில் பல வருவாய் கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பக்கத்தில் பணியாற்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாத கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.