வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்செங்கோடு, நவ.21: வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறை  மன்றம் சார்பில் “ஆஸ்ட்ரோ இயற்பியல் பிரிவில் இன்றைய வேலைவாய்ப்பு   வழிமுறைகள்” என்னும் தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு  கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைவர் பழனியப்பன், செயலாளர் கவிதா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை   வகித்தனர். ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர்  துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவி கவிதா வரவேற்றார்.

முதல்வர்  விஜயகுமார் வாழ்த்தி பேசினார். முடிவில் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories: