வேலூர், நவ.16: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து குடிபோதையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பாஸ்ட்புட் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் குடிபோதையில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் கடைக்காரர் பணத்தை கொடுக்க கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் நான் யார் தெரியுமா? நான் போலீஸ், என்னிடமே பணத்தை கேட்கிறயா? எனக்கூறி அந்த கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த கடையையும் அந்த நபர் அடித்து நொறுக்கி உள்ளார்.