கோவை,நவ.16: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2,129 மடிக்கணினிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும் ேபசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.