திமுக மருத்துவரணி சார்பில்

ஒரத்தநாடு, நவ. 15:  ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

நடந்தது. மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை வகித்தார். ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி, நகர செயலாளர் கிருஷ்ணகுமார், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் தியாக.இளங்கோ, சின்னையன், நாதன்.செல்வராஜ், வக்கீல் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கும்பகோணம்:  கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், குடந்தை அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் கோர்ட் வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன், பொருளாளர் கவிதா, முன்னாள் நிர்வாகிகள் வெங்கடேசன், ஆறுமுகம், ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்கள், வக்கீல்களுக்கு நிலவேம்பு கசாயத்தை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் வழங்கினார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அய்யப்பன்பிள்ளை, முதன்மை சார்பு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சண்முகப்பிரியா, கோதண்டராஜ், மாவட்ட தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் ரிஷிகேஷ், பாஸ்கரன், சுபான், மாவட்ட சித்த மருத்துவ மருந்தாளுனர் மீனாட்சி பங்கேற்றனர்.

Related Stories: