பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

பொன்னமராவதி, நவ.15:  பொன்னமராவதியில் உள்ள  ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண சிறப்பு வழிபாடு நடந்தது. கந்த சஷ்டியின் மறுநாள் திருக்கல்யாண வழிபாடு நடத்தப்படும். இதன்படி நேற்று மாலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  கணேசகுருக்கள் வேள்வி நடத்த வழிபாடு நடைபெற்றது. தமிழாசிரியர் முருகேசன் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

Related Stories: