காளையார்கோவில், நவ.15: காளையார்கோவிலில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காளையார்கோவிலில் உள்ள சுகந்தவன பெருமாள் கோவில் கலையரங்கில் தமிழ் மன்றம், திருக்கானப்பேரூரார் கலைக்களஞ்சியம் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் முற்றோதல் விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் நாவலர் வேங்கடசாமி நாட்டார், திருவருள் கல்லூரி செயலர் கலியப்பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக தலைமை ஆசிரியர் கழக செயலர் புலவர் நாகேந்திரன், காளையார்கோவில் முன்னாள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தனுக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காளையார்கோவில் தமிழ் மன்ற தலைவர் புலவர் காளிராசா வரவேற்றார்.