கரூர், நவ. 14: ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சைல்டுலைன் 1098, குழந்தைகள் நலன் இணைந்து குழந்தைகள் தினத்தையொட்டி கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
எஸ்பி ராஜசேகரன் தலைமை வகித்தார். கரூர் புனித அந்தோணியார் சிறப்பு பள்ளியை சேர்ந்த குழந்தைகளை சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்ராஜா, வரவேற்று பேசினார். தொடர்ந்து குழந்தைகளுக்கு எஸ்பி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.