கரூர், நவ. 14: மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்ட ஆய்வுப்பணி நடந்து வருகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் விபத்துக்களை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி 5 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை துவக்கி வைத்தனர்.பின்னர் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் கருப்பம்பாளையம், பெரியார்வளைவு (சின்ன ஆண்டாங்கோயில் பிரிவு), வெண்ணைமலை (ராம்நகர் பிரிவு), மண்மங்கலம் மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் சாலையை கடக்கும் போது தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.