கூடுவாஞ்சேரி, நவ.2:கூடுவாஞ்சேரி அடுத்த சினிவாசபுரம் முதல் பிரதான சாலையில் வசிப்பவர் தேவராஜ் ஸ்டீபன் (37), இவர் மனைவி எபோரா சாரோன் (32) இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பினர். அங்கு வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 28 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.