சென்னை: வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து பராமரித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பில் உள்ள ஒரு அடுக்குமாடியின் மேல் தளத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று காலை அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, குடியிருப்பின் பி பிளாக் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். அதில், கட்டிடத்தை சேர்ந்த பிரபல ரவுடிகள் மாணிக்கம் (22), யுவராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் மட்டும் மொட்டை மாடிக்கு அடிக்கடி செல்வது தெரிந்தது. அதில் கடந்த 10 நாட்களுக்கு முன் யுவராஜ், ஒரு வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது தெரியவந்தது.