அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் விற்பனை மது பதுக்கி விற்றவர் கைது

கறம்பக்குடி, அக்.25:   கறம்பக்குடி அருகே துவார் கெண்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(43). இவர் அரசு அனுமதியின்றி மது விற்பதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி எஸ்ஐ பெரியசாமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளப்பண்பட்டி கடை வீதியில் உள்ள பெட்டிக்கடையில் ரமேஷ் மது விற்பனை செய்து கொண்டிருந்தபோது அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்தனர்.

Related Stories: