திருச்சி, அக்.23: திருச்சி ஒத்தக்கடை புதுத்தெருவை சேர்ந்தவர் பவுல்ராஜ் (57). இவர் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை பென்வெல்ஸ் ரோட்டைச் சேர்ந்த சேவியர் (46) என்பவர் கடையில் டீ குடித்து முடித்தபின், ரூ.100ஐ கொடுத்தார். சில்லறை இல்லை, சிறிது நேரம் கழித்து வாங்கிக்கொள்ளும்படி கடைக்காரர் கூறியதால் சேவியர் சென்றுவிட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் சேவியர் கடைக்கு சென்று காலையில் டீ குடித்துவிட்டு பணம் கொடுத்தேன். சில்லறை இல்லை என்றதால் பணத்தை கொடுத்துவிட்டு சென்றேன்,