கும்பகோணம்,அக்.23: மரக்கிளை முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் கும்பகோணம் அடுத்த மருத்துவக்குடி கிராமத்தில் 3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் பகுதியில் கடந்த 19ம் தேதி மழை ெபய்தது. அப்போது மருத்துவக்குடி தெற்கு தெரு சாலையோரம் இருந்த முருங்கைமரத்தின் கிளை முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் மின்வயர் அறுந்து மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள், மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தனர். பின்னர் தஞ்சையில் உள்ள மின்சாரத்துறை உயரதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தபோது மரக்கிளை விழுந்ததால் மின் கம்பத்தில் விரிசல் விட்டுள்ளது. அதனால் அங்குள்ள மின்கம்பத்தை மாற்றிய பிறகு தான் மின்சாரம் வழங்க முடியும் என்றனர்.