ஏரல், அக்.23: தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள் விழாவையொட்டி ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் கங்கா தீர்த்த கட்டத்தில் பெருங்குளம் செங்கோல் மடம் ஆதீனம் நதியில் மலர் தூவி, சிறப்பு வழிபாடு நடத்தினார்.144 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஏரல் சேர்மன் கோயில் ஞான தீர்த்தம் படித்துறை, சிறுத்தொண்டநல்லூர் ஊர் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்துள்ள ஏரல் சுந்தவிநாயகர் கோயில் ஞான தீர்த்தம் படித்துறை, மங்கலகுறிச்சி தடுப்பணை, வாழவல்லான் கங்கா தீர்த்தக் கட்டம் மற்றும் உமரிக்காடு தீர்த்தகட்டப்பகுதிகளில் கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம், மற்றும் கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தீர்த்த கட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் வாழவல்லான் கங்கா தீர்த்த கடடத்தில் நேற்று 11வது நாள் விழாவையொட்டி பெருங்குளம் செங்கோல்மடம் ஆதீனம் வருகை தந்து கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை நடத்தினார். தொடர்ந்து அவர் நதியில் மலர் தூவி அபிஷேகம் நடத்தினார்.