பண்ருட்டி, அக். 17: ஏஐடியுசி மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மணிவாசகம் தலைமையில் பண்ருட்டியில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் துரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், என்எல்சி நிறுவனத்தின் கையிருப்பில் இருந்த உபரி நிதி ரூ.18,318.92 கோடி 31.03.2015க்கும் 14.07.2017க்கும் இடைப்பட்ட காலத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து என்எல்சி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கியும் பதில் இல்லை.