ஏஐடியுசி மாவட்ட குழு கூட்டம்

பண்ருட்டி, அக். 17:   ஏஐடியுசி மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மணிவாசகம் தலைமையில் பண்ருட்டியில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் துரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், என்எல்சி நிறுவனத்தின் கையிருப்பில் இருந்த உபரி நிதி ரூ.18,318.92 கோடி 31.03.2015க்கும் 14.07.2017க்கும் இடைப்பட்ட காலத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து என்எல்சி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கியும் பதில் இல்லை.

எனவே என்எல்சி நிர்வாகத்தின் முறைகேடு நடந்திருப்பது குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாவட்ட மாநாடு நெய்வேலியில் நடத்தப்பட வேண்டும், ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டம் சார்பில் அனைத்து சங்கங்களும் பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜன், பட்டுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: