தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை

பண்ருட்டி, அக். 17:   பண்ருட்டி அன்வர்ஷா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சலீம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி மெகருனிசா (26). இருவருக்கும் திருமணம் நடந்து 9 வருடம் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. இதுதொடர்பாக அவ்வப்போது சலீம் குடும்பத்தார் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மெகருனிசா வீட்டின் தனி அறையில் திடீரென தூக்கில் தொங்கி இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மெகருனிசாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மெகருனிசாவின் தாயார் ஹபிபுன்னிசா பண்ருட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: