பண்ருட்டி, அக். 17: பண்ருட்டி அன்வர்ஷா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சலீம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி மெகருனிசா (26). இருவருக்கும் திருமணம் நடந்து 9 வருடம் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. இதுதொடர்பாக அவ்வப்போது சலீம் குடும்பத்தார் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மெகருனிசா வீட்டின் தனி அறையில் திடீரென தூக்கில் தொங்கி இறந்தார்.