சங்கராபுரம், அக். 17: சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி கிராமத்தில், முஸ்குந்தா ஆற்றின் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. டிரைவரை பிடித்து விசாரனை நடத்தியதில், திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது தெரிந்தது.