வேப்பூர், அக். 17: வேப்பூர் அருகே கூட்டாளியை கரும்பு கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அருகே, கடந்த மாதம் 14ம் தேதி அடையாளம் தெரியாத நபர் கரும்பு கட்டைகளால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இதில், இறந்தவர் சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியை அடுத்த ஒட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(35) என்பதும், தனது கூட்டாளிகளான ராமநாதபுரம் மாவட்டம், அரண்மனை வாசலை சேர்ந்த தினேஷ்குமார்(34), நீமாங்குளத்தை சேர்ந்த கலைஞானம், காளையார் கோவிலை சேர்ந்த கல்யாண சுந்தரம்(34), சிவகங்கை மாவட்டம், கோமாலிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகியோருடன் கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.