மன்னார்குடி, அக். 16: உலக கைகழுவும் தினத்தையொட்டி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மன்னார்குடி நகராட்சி பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15ம்தேதி உலக கைகழுவும் தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் அறிவுறுத் தலின் பேரில் மன்னார்குடி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ மனவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தேவி தலைமை வகித்தார். கோட்டூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சவுந்தரராஜன் பள்ளி குழந்தைகளுக்கு சோப்பினால் கை கழுவும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,உணவருந்தும் முன்னரும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். உலகில் பல நோய்கள் சுகாதார இன்மையினால் வருகிறது.