ஆசிட் லாரி மீது அரசு பஸ் மோதல்

சேலம், அக்.12: சேலத்தில்  ஆசிட் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டெப்போவில் இருந்து, அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை 2 மணிக்கு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற ஆசிட் டேங்கர் லாரி மீது, பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்ததுடன், முன்பக்கம் நொறுங்கியது.

லாரியின் பின்பகுதியில் சிறிது சேதம் அடைந்தது. இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன்(30), கண்டக்டர் சங்கர்(36) மற்றும் 6 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று போக்கு வரத்தை சீர் செய்தனர். அரசு பஸ் சற்று வேகமாக வந்து மோதியிருந்தால், ஆசிட் மூலம் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: