நாமக்கல், அக்.12: நாமக்கல் பகுதியில், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து 3 பேர் கொண்ட கும்பல், தொடர்ந்து செல்போன்களை திருடி வந்தனர். நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை, திருச்சி ரோடு, சேலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மாலை நேரங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 பெண்களிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் அளித்த புகார்களின் பேரில், நாமக்கல் போலீஸ் எஸ்ஐ ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம், நாமக்கல் -திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்று ஒரு பெண்ணிடம், பைக்கில் வந்த 3 பேர், செல்போனை பறித்து சென்றனர்.