நாகை,அக்.12: அதிமுக அரசின் ஊழல் பட்டியல் துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் திமுகவினர் வழங்கினர். நாகை தெற்கு மாவட்ட திமுக மற்றும் இலக்கிய அணி சார்பில் மக்களிடம் செல்வோம், சொல்வோம், மாற்றும் காண்போம் என்ற தலைப்பில் கலெக்சன், கமிஷன், கர்ப்பஷேன் ஆட்சியில் அமைச்சர்களின் ஊழல் பாரீர், உங்களுக்கு வரவேண்டிய நலத்திட்டங்களை ஊழல் மூலம் அமைச்சர்கள் ஒதுக்கிக்கொண்ட அவலம் பாரீர் என அதிமுக அரசின் ஊழல் பட்டியல் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரஜேந்திரன், மேகநாதன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நாகை நகர செயலாளர் போலீஸ்பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகையன் வரவேற்றார். மாவட்ட கழக பொறுப்பாளர் கவுதமன், தலைமை தாங்கி நாகை கடை தெரு உள்ளிட்ட பலவேறு பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.