பொள்ளாச்சி,அக்.12: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே தோல்சந்தை செயல்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமை நடக்கும் சந்தை நாளில் பொள்ளாச்சி நகர் மற்றும் ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் ஆட்டுத்தோல், குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் துவக்கத்தையடுத்து கடந்த இரண்டு வாரமாக ஆட்டுத்தோல் வரத்து குறைந்தது.