கோவை, அக்.12: கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ரயில் பயணிகளிடம் நகை பறித்தவரை கோவை போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் கடந்த வாரம் சேலத்திலிருந்து கோழிக்கோடு நோக்கி யஸ்வந்த்பூர் கண்ணனூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று ெகாண்டிருந்தார்.கோவை அருகே ரயில் சிக்னலில் நின்ற போது இவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்த ஒருவர் தப்பினார். கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில், அரக்கோணம் அருகே ரயில் பயணிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர் ஒருவர் ரயில்வே போலீசில் சிக்கினார். விசாரணையில், இவர் பானுமதியிடம் 10 பவுன் பறித்தது தெரியவந்தது. நாக்பூரை சேர்ந்த இவரின் பெயர் உத்தம்பட்டேல் (32) என்பதும், ஓடும் ரயிலில் நகை பறிப்பதை இவர் தொழிலாக ெகாண்டிருப்பதும் தெரியவந்தது. பல்வேறு மாநிலங்களில் இவர் பயணிகளிடம் நகை பறித்து தப்பியுள்ளார். இவரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.