வத்திராயிருப்பு, அக்.12: வத்திராயிருப்பில் டிராக்டர் டிரைவரை கொலை செய்து தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு நாடார் ெதருவை சேர்ந்தவர் சரவணன்(44). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து 9 மணியளவில் வெளியில் சென்றார். அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சேதுநாராயணன்விலக்கு பகுதியில் கழுத்து, தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளத்துரை, ஆறுமுகம் ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.