வத்திராயிருப்பில் டிராக்டர் டிரைவர் வெட்டி படுகொலை

வத்திராயிருப்பு, அக்.12: வத்திராயிருப்பில் டிராக்டர் டிரைவரை கொலை செய்து தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு நாடார் ெதருவை சேர்ந்தவர் சரவணன்(44). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து 9 மணியளவில் வெளியில் சென்றார். அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சேதுநாராயணன்விலக்கு பகுதியில் கழுத்து, தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளத்துரை, ஆறுமுகம் ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.

எஸ்பி ராஜராஜன், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன், எஸ்ஐ செல்வக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சரவணின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: