திருச்செங்கோடு, அக்.11: திருச்செங்கோட்டில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.
திருச்செங்கோட்டில், கடந்த சில நாட்களாக போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன. சாலையோரத்தில் பழக்கடை, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். வடக்கு ரத வீதியில், பொக்லைன் மூலம் பழக்கடை,