நாமக்கல், அக்.11: நாமக்கல்லில் உலக தமிழ் கழக பொன் விழா நடந்தது. நாமக்கல்லில், உலக தமிழ் கழகத்தின் பொன்விழா நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தனபாலன் தலைமை வகித்தார். நாமக்கல் கிளை தலைவர் சண்முகம் வரவேற்றார். விழாவில், உலக தமிழ் கழக தலைவர் கதிர் முத்தையன் பேசுகையில், ‘தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே பேசி, பிறமொழி கலப்பின்றி பேச வேண்டும். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டவேண்டும். நல்ல தமிழில் கடிதம், கட்டுரைகளை எழுதி பழக வேண்டும். உலக தமிழ் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மாநில அளவிலான மாநாடு விரைவில் நடத்தப்படும்,’ என்றார்.