திருத்துறைப்பூண்டி,அக்.10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து ஓவரூருக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் மினி பஸ் சென்றது.
இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எழிலூர் ஊராட்சி இளநகர் நேமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் வயலில் மினி பஸ்கவிழ்ந்தது. இதில் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வேலை பார்த்து விட்டு மினி பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த தீபா, சூர்யா (19), புனிதா (35), உமாராணி (18) பூமதி (17) உள்ளிட்ட 11 பெண்கள் 3 ஆண்கள் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை பேருந்தின் கண்ணாடியை உடைத்து மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.