கோவை, அக்.5: கோவை பட்டுக்கூடு விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனையில் விலை கிலோவிற்கு ரூ.31 குறைந்துள்ளது. கோவை பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள பட்டுக்கூடு விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனைக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2,049 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வியாபாரிகள் மற்றும் பட்டுநூல் கூட்டுறவு சங்கத்தினர் கொள்முதல் செய்தனர்.