சேலம், செப்.25:சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.