புதுக்கோட்டை, செப். 21: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமை கழக அறிவிப்பிற்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவரும், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக, 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இதுவரை தோல்வியையே சந்திக்காத ஒரு மகத்தான தலைவருக்கு ‘தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பின் கீழ் அரங்க கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் புதுக்கோட்டை மாலையீட்டில் அமைந்துள்ள கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.