அறந்தாங்கி, செப். 21: அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றதுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டுகோட்டை சாலை வாகை மரம் பகுதி அக்னி பஜார் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு பிரசாரம் செய்தனர்.இந்திய அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு இந்திய குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்து உரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுறவு சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது.