தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் வாணியம்பாடியில் நடந்தது

வாணியம்பாடி, செப்.21: வாணியம்பாடி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் பரசுராமன் தலைமை வகித்தார். நாட்றம்பள்ளி ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தை மேற்கு மாவட்ட செயலாளர் வர்ணகுமார் தொடக்கி வைத்தார். மாநில செயலாளர் சி.கே.தனபால் பேசுகையில், ‘தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும். விவசாயிகள் மின்சார இணைப்பிற்காக பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் மின் இணைப்பை தொடர்ந்து இலவசமாக கொடுக்கின்றனர். அதுபோல் தமிழகத்திலும் காத்திருப்பு இல்லாமல் உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.முடிவில் மகளிர் அணி தலைவி தனசேகரி நன்றி கூறினார்.

Related Stories: