விராலிமலை, செப். 19: விராலிமலை அருகே கடத்தி வருவதாக நினைத்து அரசு பணிக்காக மணல் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து தாசில்தார் சம்பவ இடத்துக்கு வந்து சிறைபிடித்த லாரியை விடுவித்தார்.விராலிமலை அருகே கோறையாறு பகுதியில் இருந்து மணல் எடுத்து கொண்டு நேற்று மாலை கத்தலூர் வழியே ஒரு லாரி சென்றது. இதை பார்த்த பொதுமக்கள், மணல் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விராலிமலை தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் லாரியை பொதுமக்கள் விடுவித்தனர்.