சேலம், செப். 19: கொளத்தூர் கிழக்கு காவேரிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு. விவசாய கூலி தொழிலாளி. இவரது வீடு காவிரிகரையோரம் உள்ளது. நேற்று மாலை அவரது குழந்தை சூரியா(6) வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, தாயை தேடி சென்ற அவன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை தேடியபோது, அப்பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் சடலமாக கிடந்தான். இதுகுறித்த தகவலின் பேரில் கொளத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.