காட்பாடி அருகே குடிபழக்கத்திற்கு சிகிச்சை பெற்ற டிரைவர் பலி

வேலூர், செப்.19: காட்பாடி அருகே குடிப்பழக்கத்திற்கு சிகிச்சை பெற்ற டிரைவர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பழனி(32), டிரைவர். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி சத்துவாச்சாரியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கிடையில் நேற்றுமுன்தினம் இரவு பழனிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பழனியின் மனைவி மணிமேகலை சத்துவாச்சாரி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: