நாகை,ஆக.14: சிலை திருட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசை கண்டித்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நாகை புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொது செயலாளர் தனபாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ஐ.ஜி. பொன்.மாணிக்க வேலை விசாரணை அதிகாரியாக நியமிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கார்மேகம், விவசாயிகள் அன்பழகன், ராமசாமி, மூர்த்தி, சரவணன், பக்கிரிசாமி மற்றும்பலர் கலந்து கொண்டனர்.