பொன்னமராவதி,ஆக14: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீடு முகாம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின்கீழ் மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் 17ம் தேதி பொன்.புதுப்பட்டி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற உள்ளது. முகாமில் ஒவ்வொரு சிறப்புப்பிரிவிற்கும் மருத்துவர்குழு மூலமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் தலைமையில் ஒருகுழு ஆய்வு செய்து தேசியஅடையாளஅட்டை இல்லாத குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்று வழங்கப்படவும்,